இந்தியா, சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு குறித்து பேச விசேட குழு நியமிப்பு

Date:

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் விடுத்துள்ள அறிவிப்புக்கு அமைய இந்த நாட்டின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் சீனா மற்றும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்வென எட்டு பேர் கொண்ட குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

மறுசீரமைப்பு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் கடந்த வாரம் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்கவுடன் நடத்திய கலந்துரையாடலில் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து அவசர நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் சாகல ரத்நாயக்கவுக்கு வழங்கிய அறிவித்தலின் பிரகாரம் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோர் உள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜிந்துப்பிட்டியில் மீண்டும் ஒருவர் சுட்டுக் கொலை

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

ஏன் இந்த இராஜினாமா?

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீக ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல்...

ரணில் தொடர்பான B அறிக்கையின் சட்ட ஓட்டை அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன்...

அவசரமாக கூடும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு சம்பவத்தை முன்னிட்டு, இலங்கை சட்டத்தரணிகள் சங்க Bar...