தேர்தல் வேண்டுமானால் அனைத்துக் கட்சியினரும் வீதியில் இறங்க வேண்டும்!

Date:

“உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெற வேண்டுமானால் அனைத்துக் கட்சியினரும் வீதியில் இறங்கிப் போராட வேண்டும். அந்த நிலைமைக்கு நாம் இப்போது தள்ளப்பட்டுள்ளோம்.”

  • இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து நடத்திய கூட்டத்தின் தொனிப்பொருளாக, இந்தச் செய்தியை தான் நான் புரிந்துகொண்டேன் என்றும் மனோ எம்.பி. கூறினார்.

“அரசை மீறி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சக்தி இல்லை.

தேர்தல் நடத்த அரசு விடாது. ஆகவே, தேர்தல் இடம்பெற வேண்டுமானால், அனைத்துக் கட்சியினரும் வீதியில் இறங்கிப் போராட்டம் செய்ய வேண்டும். வேறு மாற்று வழியில்லை” – என்று மனோ எம்.பி. மேலும் தெரிவித்தார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட...

மூத்த அரசியல்வாதி காலமானார்

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்.  சிறிது...

கைதாகி விடுதலையான முக்கிய அதிகாரி

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின், கார் பதிவு பிரிவின் முன்னாள் பிரதி ஆணையாளர்...

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில்...