சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பு!

Date:

ஏப்ரல் மாதத்தின் முதல் 16 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 56,000ஐ தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை கூறியுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 400,000ம் சுற்றுலா பயணிகள் வரை நாட்டுக்குள் வந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) வெளியிட்டுள்ள தரவுகளின் பிரகாரம், ஏப்ரல் 1ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில், 56,402 பயணிகள் வருகை தந்துள்ளனர்.

ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தினசரி வருகை சராசரியாக 3500 ஆக இருந்துள்ளது. எவ்வாறாயினும், ஏப்ரல் 15ஆம் திகதி முதல் தினசரி சுற்றுலா பயணிகளின் வருகை 2,000ஆக உள்ளது .

ரஷ்ய, இந்தியா, ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, சீனா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...

ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அனுப்பிய எச்சரிக்கையுடன் கூடிய அவசர கடிதம்

2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி...

நிமல் லான்சாவுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில்...

தம்மிக்க பெரேராவின் மேலும் ஒரு வியாபார விருத்தி

இலங்கையின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான தம்மிக்க பெரேரா, தனது வணிக வலையமைப்பில்...