மடுல்சீமை மக்களிடம் சஜித் மன்னிப்பு கோரவேண்டும் ; வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை!

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மடுல்சீமைக்கு வந்து எமது மக்களிடம் மன்னிப்பு கேட்டால் மாத்திரமே கட்சியுடன் செயல்படுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், சஜித் பிரேமதாச மன்னிப்புக் கோராவிட்டால், ஐக்கிய மக்கள் சக்திகியிலிருந்து வெளியேறுவேன் எனவும் எச்சரித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மடுல்சீமையில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருவதாக உறுதியளித்தும் வரவில்லை. எமது மக்களை அவர் புறக்கணிக்க முடியாது. சஜித் பிரேமதாச இங்கு வந்து மக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நான் இனி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நாடு முழுவதிலும் இன்று (9) காலை 8 மணி முதல் 48...

NDB விவகாரம்: இலங்கை மத்திய வங்கி அமைப்பில் மாற்றம் அவசியம்

-அடால்ஃப் தேசிய அபிவிருத்தி வங்கி PLC (NDB) இல் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும்...

நிலக்கரி கொள்முதல் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கை வெளியீடு

நுரைச்சோலை லக்‌விஜய மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் 2025/2026 பருவத்திற்கான...