சுகாதார அமைச்சர் பதவிக்கு தள்ளுமுள்ளு!

Date:

சுகாதாரத்துறை அமைச்சர் பதவியில் மாற்றம் ஏற்படும் என அரசியல் களத்தில் பரவி வரும் செய்திகளுடன், அந்த அமைச்சு பதவியை பெற அரசியல் சண்டையும் துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்துகொள்ளக் காத்திருக்கும் மூத்தவரும், ஆளும் கட்சியில் இருந்து விலகி சுயேட்சையாக செயற்படும் ஒருவரும் தனக்கு சுகாதார அமைச்சர் பதவியை வழங்குமாறு உத்தியோகப்பற்றற்ற முறையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவர்கள் இருவரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர்கள் என்றும் கூறப்படுகிறது.

எனினும், ஜனாதிபதி அலுவலகம் தரப்பில் இருந்து, இந்த இருவருக்கும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

அப்படி இருந்தும், நாடாளுமன்றத்தில் சுதந்திர சபை என்ற குழுவில் உள்ள சிறப்பு மருத்துவரிடம், சுகாதாரத் துறையின் கண்காணிப்புப் பொறுப்பை ஒப்படைக்கத் தயாராகி வருவதாகவும் ஒரு கதை உள்ளது.

இதற்கிடையில், கெஹலிய ரம்புக்வெல்ல தனது சுகாதார அமைச்சர் பதவியை பாதுகாக்க பெரிய சமூக ஊடக பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாளை ஜனாதிபதி அனுரவை சந்திக்கத் தயாராகும் மனோ அணி

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை, தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு நாளை...

புதிய வரி பில் திட்டம் தள்ளிவய்ப்பு

2026 ஏப்ரல் 01 முதல் அமலுக்கு வரவிருந்த மதிப்பு கூட்டு வரி...

மேலும் ஒரு கடல் வழி போதை பொருள் கடத்தல் – அறுவர் கைது

இலங்கை கடற்படையினர் தென்மேற்கு திசையில் உள்ள ஆழ்கடலில் மேற்கொண்ட சிறப்பு...

ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர் பதவி நீக்கப்படுவாரா?

2015 ஆம் ஆண்டு இலங்கை உர நிறுவனத்தின் கொள்முதல் நடவடிக்கையில் ரூ....