Wednesday, May 14, 2025

Latest Posts

STF துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் பலி

தெற்கில் மீண்டுமொரு துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும், தெல்வத்த, மெட்டியகொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும் அவர் 42 வயதுடைய நபர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் பாதாள உலக உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்ற வேளையில், வீட்டில் பதுங்கியிருந்த சந்தேகநபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறப்பு அதிரடிப்படையில் ஒரு துப்பாக்கி அங்கு தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து சந்தேக நபர் சுடப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

கொல்லப்பட்டவர் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் தகமுனி பாலேந்திரசிங்கத்தின் கொலையில் சந்தேக நபர் என பொலிஸார் தெரிவித்தனர். காலி கரகொட பிரதேசத்தில் அண்மையில் இந்த கொலை இடம்பெற்றது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.