இணையதளம், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவதால் பல சமூகப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன

Date:

இணையத்தின் கட்டுப்பாடற்ற பாவனை மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் தவறான பாவனையினால் நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற பல சமூகப் பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகம் தடுப்பு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பல வளர்ந்த நாடுகளில், இணையம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் விதிமுறைகளுடன் பயன்படுத்தப்படுகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில், தற்போதைய சமூகம் இடைவிடாத போட்டியில் உள்ளது, மேலும் போட்டியின் தன்மை சாதனைக்காக பாடுபடுவதால், ஒரு தலைமுறை மன அழுத்தத்தில் இருப்பதைக் காண்கிறோம். எனவே எதிர்கால பயிற்சித் திட்டங்களில் மனவளக்கலை துறையில் அதிக கவனம் செலுத்துவது அவசியமானது என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இலங்கையில் உள்ளுர் மட்டத்தில் ஏற்படும் சமூகப் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு பல அதிகாரிகள் உள்ளனர்.

331 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 25 மாவட்ட அபிவிருத்திக் குழுக்களிலும் மாதாந்த அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

மேலும் ஆய்வுகளை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவது பொருத்தமற்றது என சிலர் வாதிடுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

பாடசாலை பாடத்திட்டத்தில் மிகவும் பொருத்தமான முறையில் பாலியல் கல்வி சேர்க்கப்பட வேண்டும். எனவே, எதிர்வரும் கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளில் இது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...