பெருந்தோட்ட பங்குகள் தனியாருக்கு விற்பனை – சஜித் குற்றச்சாட்டு

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மலையகத் பெருந்தோட்ட சமூகத்தின் பல பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

மலையக தோட்டத் தொழிலாளர்களின் நலன்புரி மற்றும் ஊழியர் சேமலாப நிதிகள் பல வருடங்களாக வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (12) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சில தோட்டங்களின் பங்குகளை பல்வேறு வர்த்தகர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தேயிலை விளைச்சலில் 70% க்கும் அதிகமான சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் வழங்குவதாகவும், அரசுக்கு சொந்தமான தேயிலை தோட்டங்கள் குறைந்த பங்களிப்பை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் தரிசு காணிகளை பல்வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு பதிலாக தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அந்த தரிசு நிலங்களை வழங்கி அவர்களை தனது அரசாங்கத்தில் தொழில் முயற்சியாளர்களாக்க உள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...