ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

Date:

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கை மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இருந்து விஜேராம சந்தி வரை பேரணியாக செல்ல முற்பட்ட வேளையிலேயே பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே அமைதியின்மை ஏற்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.

அமைதியின்மையை கட்டுபடுத்துவதற்காகவே பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டதாக செய்தியாளர் கூறினார்.

பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் இன்று அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஷம்மி சில்வாவை அகற்றும் முடிவு பொய்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவை அந்த பதவியில் இருந்து...

1000 கோடி தர முடியாது – சட்டத்தின் ஊடாக மோதி பார்ப்போம்!

விவசாயம், நிலம், பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே.டி. லால்காந்தின்...

NDB விவகாரம் CID அலசல்!

நம்பகமான தகவல்களின் படி, தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி (NDB)யில் இடம்பெற்றதாக...

மன்னிப்பே கிடையாது!

தனது சொத்து மற்றும் கடன் அறிக்கைகள் தொடர்பாக பொய்யான செய்திகளை வெளியிட்ட...