தமிழர் நிலம் அழிக்கப்படுகிறது – மாவை எச்சரிக்கை!

Date:

தொழிலாளர்களின் உரிமைக்காக மட்டுமல்ல தமிழர் நிலம் அழிக்கப்படும் நிலையில் ஒன்று கூடியிருக்கிறோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தமிழ்த் தேசிய மே நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொழிலாளர்களின் உரிமைக்காக மட்டுமல்ல தமிழர் நிலம் அழிக்கப்படும் நிலையில் இன்று மே தினத்தில் ஒன்று கூடியிருக்கிறோம். காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டும், மதம் அழிக்கப்படும் நிலையிலும், மொழிக்கான உரிமை மறுக்கப்பட்டு அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டிய நிலையில் உள்ளோம். நிலம், மொழி உள்ளிட்ட விடயத்துக்காக தொழிலாளர் தினத்திலும் பிரகடனங்களாக பகிரங்கமாக முன்வைக்கிறோம்.

இன்றைய மேதின நிகழ்வின் ஊடாக சிதறுண்டுள்ள மக்கள் இணைந்து செயற்பட வேண்டும் என்பதை வலியுத்துவதாக உணர்கிறேன்.

விவசாயிகளாகவும், தொழிலாளர்களாகவும் விடுதலைக்காகவும் நின்ற மண்ணில் இன்று மே தினம் இடம்பெற்றுள்ளது. அமைதியாகவும், ஜனநாயக வழியிலும் போராட்டங்களை முன்னெடுக்கவும் அடித்தளமாக இன்றைய மே தின நிகழ்வு அமைந்துள்ளதாகவும் அவர் உரையில் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில்...