டயானா கமகே பிணையில் விடுதலை

Date:

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 20ஆம் திகதி இரகசிய பொலிஸாரால் சந்தேக நபராக பெயரிடப்பட்ட டயானா கமகே, புலம்பெயர்ந்தோர் மற்றும் குடியேற்றவாசிகள் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாகவும் தம்மை கைது செய்ய உள்ளதாகவும் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

சந்தேகநபர் குற்றத்தைச் செய்ததாக ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டு நீதிமன்றத்திற்கு வந்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு எழுத்து மூலம் அறிவித்ததையடுத்து, அவர் நீதிமன்றில் ஆஜரானார்.

இரகசியப் பொலிஸார் எழுத்துமூல அறிவித்தல் வழங்கியிருந்த போதிலும், நீதிமன்றில் ஆஜராகிய டயானாவை நீதவான் தனது உத்தரவைப் பிறப்பித்து சந்தேக நபரை பிணையில் அனுப்பினார்.

5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல உத்தரவிட்ட நீதவான், தரப்பினருக்கும் சட்டத்தரணிகளுக்கும் பாதகமான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என சந்தேக நபரை கடுமையாக எச்சரித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள்...

தன் மீதான தாக்குதல் செய்தி குறித்து டில்வின் சில்வா!

JVP தலைமையகமான பெலவத்தையில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினரும்...

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து!

​யாழ். மண்ணின் உயிர்நாடியாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை...

கப்பில சந்திரசேன தற்கொல?

கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள்...