ஜனாதிபதித் தேர்தல்: தனியார் துறையினருக்கான விடுமுறை விபரம் அறிவிப்பு!

Date:

2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்திய தேர்தல்கள் ஆணைக்குழு, அனைத்து ஊழியர்களுக்கும் வாக்களிக்க விடுமுறை வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

தனியார் துறை ஊழியர்களுக்கும் கீழ்க்கண்டவாறு தூரத்திற்கு ஏற்ப விடுமுறை அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

– 40 கி.மீ. அல்லது அதற்கு குறைவாக இருந்தால் அரை நாள் விடுமுறை
– 40 – 100 கிமீ வரை இருந்தால் ஒரு நாள் விடுமுறை
– 100 – 150 கி.மீ தூரம் என்றால் ஒன்றரை நாள் விடுமுறை
– 150 கி.மீ.க்கு மேல் இருந்தால் இரண்டு நாட்கள் விடுமுறை

மேலும், பணியிடத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ள சில வாக்காளர்களுக்கு வாக்களிக்க மூன்று நாட்கள் தேவைப்பட்டால் அதற்குத் தேவையான மூன்று நாள் விடுமுறையையும் அந்த நிறுவனங்கள் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க குறிப்பிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணில் பிணையில் விடுதலை!

பொது சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்...

ரணில் ஆதரவு போராட்டத்தில் அனுர கோ ஹோம் கோஷம்!

கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள்...

ரணிலுக்கு பிணை வழங்க கடும் எதிர்ப்பு

பொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்...

ரணிலுக்கு ஆதரவாக குவிந்துள்ள சட்டத்தரணிகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு விசாரணையில் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, நீதியும்...