யார் யார் தேசிய பட்டியலில் வரலாம்

Date:

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது கட்சி அல்லது சுயேச்சைக் குழுவினால் தேசியப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளர்கள் அல்லது பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்களை மாத்திரமே நியமிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு.“29 தேசியப்பட்டியல் எம்.பி பதவிகள் தொடர்பாக கட்சியின் செயலாளர்களுக்கு அறிவித்து, நியமிக்கப்பட்ட தேசியப்பட்டியல் எம்.பி பதவிகளுக்கு வேட்புமனுக்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்டோம்.

இதன்படி கட்சியின் செயலாளர் அல்லது சுயேச்சைக் குழுவின் தலைவர் தேசியப்பட்டியலில் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள வேட்புமனுவில் உள்ள பெயர்களில் இருந்து உரிய எண்ணிக்கையை தெரிவு செய்து அனுப்ப முடியும்.

அல்லது இந்தத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒருவருக்குக் கூட கட்சியின் செயலாளர் தேசியப் பட்டியல் எம்.பி பதவியை வழங்கலாம்.

தேசியப் பட்டியலிலும், பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான தொகுதியின் வேட்புமனுவிலும் ஒரு பெயரைத் தவிர வேறு எந்தப் பெயரையும் வர்த்தமானியில் வெளியிட முடியாது.

நேற்று (நவம்பர் 16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணிலின் உத்தியோகபூர்வ காரின் காப்பீட்டு செலுத்த அரசாங்கம் மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அரசாங்கம் வழங்கிய உத்தியோகபூர்வ காரின் காப்பீட்டு...

STF துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் பலி

ஹம்பாந்தோட்டை, சூரியவெவ, வெவேகம காட்டுப் பகுதியில் சிறப்பு அதிரடிப் படை (STF)...

மலேசிய தமிழ் வல்லுனர் பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்றார்!

மலேசியாவில் பினாங்கு மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ்( Chow Kon...

சஜித் சிங்கப்பூர் விஜயம்

அரச ஊழியர்களின் பயிற்சி தொடர்பில் ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...