அரிசியை அதிக விலைக்கு விற்பனை – 342 சுற்றிவளைப்புகள்

Date:

பண்டிகைக் காலத்தில் கட்டுப்பாட்டு விலைக்கு அரிசி விற்பனை செய்யாமை தொடர்பில் 342 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த 17ஆம் திகதி முதல் இன்று (16) வரை இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக குறித்த அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் குறிப்பிட்டார்.

அதன்படி, குறித்த சுற்றிவளைப்புக்களில் 6க்கு நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் ஊடாக 7 ​​இலட்சம் ரூபா தண்டப்பணமாக அறவிடப்படுவதற்கான தீர்ப்பு கிடைத்துள்ளது.

ஏனைய சுற்றிவளைப்புகள் தொடர்பாகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற தீர்ப்புகள் பெறப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வீட்டு பயனாளிகளுக்கு தபாலில் அனுப்ப வேண்டிய கடிதத்துக்கு எதற்கு பெருவிழா?

தோட்ட மக்களின் வீடுகளுக்கான உரிமைப் பத்திரங்கள் இதுவரை அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன,...

அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்க தயாராகும் சஜித்!

அரசாங்கம் ஏதேனும் வகையில் மின் கட்டணத்தை அதிகரித்தால், வீதியில் இறங்கி அதற்கு...

களுத்துறை தெற்கு பகுதியில் துப்பாக்கிச் சூடு

களுத்துறை தெற்கு பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது, மோட்டார் சைக்கிளில் வந்த...

முட்டை விலை குறைப்பு

பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்களின் மாஃபியாவை நிறுத்தும் நோக்கில் முட்டையின் விலையை...