ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் பௌசி விடுதலை

Date:

ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பெளசியை விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கை வாபஸ் பெறுவதற்கு முடிவு செய்தபிறகு இத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது .

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை அமைச்சராக கடமையாற்றிய போது, ​​இராஜாங்க அமைச்சர் பௌசி, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு சொந்தமான லேண்ட் க்ரூஸர் ஜீப்பை முறைகேடாக பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு 1.07 மில்லியன் ரூபா சட்டவிரோதமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக பௌசி மீது குற்றம் சுமத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது .

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் எழுத்துமூல அனுமதியுடன் புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கான உரிமையை தமக்கு ஒதுக்கி இந்த வழக்கை வாபஸ் பெற தீர்மானித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...

இலங்கை பெண்கள் நால்வர் சடலங்களாக மீட்பு

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை...

எரிபொருள் விலை மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு 12.00...