இந்திய மீனவர்களின் அத்துமீறலைக. கண்டித்துயாழ்ப்பாணம் மயிலிட்டிப் பகுதியில் இன்று போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
வலிகாமம் வடக்கு மீனவர் சமாசம் மற்றும் மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் மயிலிட்டி துறைமுகத்தில்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலகர் அமரர் ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தத்தின் இராண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வும், நினைவுப் பேருரையும் வியாழக்கிழமை பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் நினைவுகூரப்பட்டது. இந்நிகழ்வில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, சிரேஸ்ட...
பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் முழங்காவில் தேசிய பாடசாலையின் பிரதி அதிபருமான சிறீரஞ்சன் அவர்கள் இன்றைய தினம் காலை 9.30...
இந்நாட்டில் வாழும் வடகிழக்கு, முஸ்லிம் தேசிய இனங்களுடன் கரங்கோர்த்து, சிங்கள சகோதர மக்களுக்கும் ஒரு செய்தியை சொல்லி, மலையக மக்களின் அபிலாஷைகளை தேசிய மற்றும் சர்வதேசிய மட்டங்களுக்கும் உயர்த்த வேண்டிய வரலாற்று கடமை...
தென்னிந்தியத் திருச்சபையின் யாழ் ஆதீனத்தின் பேராயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி டானியல் தியாகராஜா அவர்கள் அண்மையில் நோயுற்றுத், தற்போது குணமாகி வரும் நிலையில், அவரின் மனைவி கலாநிதி (திருமதி) தயாளினி தியாகராஜா அவர்களால் பேராயருக்கு மூன்று மாதங்களுக்கு மருத்துவ விடுமுறை வழங்கும்படி கோரி சென்னையில் இருக்கும் தென்னிந்தியத் திருச்சபையின் சினோட்டுக்கு (Synod) எழுதப்பட்ட விண்ணப்பத்துக்கு இணங்கப் பேராயர் தியாகராஜா அவர்களுக்குக் குறைந்தது மூன்று மாதங்களுக்கு லீவு வழங்க சினோட் தீர்மானித்துள்ளது.
அத்துடன் பேராயர் டானியல் தியாகராஜா தானாகவோ அல்லது தன்னால் நியமிக்கப்பட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரியின் மூலமாகவோ திருச்சபை விடயங்களில் பணியாற்றுவதில் இருந்து தடுக்கப்பட்டிருப்பதுடன், அந்தக் காலப்பகுதியில் திருச்சபையினது நிருவாகப் பொறுப்புக்கள் யாவும் தென்னிந்தியத் திருச்சபையின் சினோட்டின் மொடரேட்டரின் பொறுப்பதிகாரியினாலேயே (Moderator’s Commissary) மேற்கொள்ளப்படும் எனவும் சினோட்டினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், தென்னிந்தியத் திருச்சபையின் மதுரை - இராமநாதபுரம் ஆதீனத்தின் பேராயராகக் கடமையாற்றும் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி எம் ஜோசேப் அவர்கள் தென்னிந்தியத் திருச்சபையின் யாழ் அத்தியட்சாதீனத்துக்கான மொடரேற்றரின் பொறுப்பதிகாரியாக நேற்று 30 டிசம்பர் 2021 இல் இருந்து மறு அறிவித்தல் வரை செயலாற்றுவார்.
பேராயர் டானியல் தியாகராஜா அவர்கள் மீண்டும் செயற்படுவதற்கு இயலுமான நிலையினை எய்தும் வரைக்கும் அவர் கடமை ஆற்றுவார். பேராயர் தியாகராஜா தொழிற்பட ஆரம்பித்ததன் பின்னர் மொடரேற்றரின் அதிகாரி வாபஸ் பெறப்படுவார்.
மொடரேற்றரின் அதிகாரி யாழ் ஆதீனத்தின் நிருவாகத்திற்குப் பொறுப்பாக இருக்கும் காலப் பகுதியில், அவருக்கு ஒத்துழைப்பினை வழங்கும்படி ஆதீனத்தின் அலுவலர்கள், ஆதீன சபை, ஆதீனத்தின் கமிட்டிகள் மற்றும் சபைகள் யாவும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றனர்.
மேற்கூறிய விபரங்களை உள்ளடக்கிய 30 டிசம்பர் 2021 திகதியிடப்பட்ட கடிதம் மொடரேற்றரின் அதிகாரிக்கு, மொடரேற்றர் (Moderator) அதி வணக்கத்துக்குரிய தர்மராஜ் இராசாலம் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடிதத்தின் பிரதிகள் யாழ் ஆதீனத்தின் அலுவலர்களுக்கும், பேராயர் டானியல் தியாகராஜா அவர்களின் பாரியார் கலாநிதி (திருமதி) தயாளினி தியாகராஜா அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.