ஐக்கிய மக்கள் கூட்டணி என்பது பணம், பதவி, சலுகைகள் அடிப்படையிலானது அல்ல மாறாக கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
“உங்களுக்கு அந்த அமைச்சர் பதவி, அவருக்கு இந்த மந்திரி பதவி, அந்தத் தலைவர் பதவி என்ற அடிப்படையில் எங்கள் கூட்டணி அமைக்கப்படவில்லை. எங்கள் கூட்டணி கொள்கை அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஏழு நட்சத்திர ஹோட்டல்களை மையமாகக் கொண்டு அல்லாமல், பொது சேவைக்கு முன்னுரிமை அளிக்கிறோம்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.