மட்டக்களப்பு மக்களுக்கு எச்சரிக்கை

Date:

மட்டக்களப்பின் உன்னிச்சை, அம்பாறை ரம்புக்கள் ஓயா ஆகியவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் அப்பிரதேச மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 169.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில் உன்னிச்சை, நவகிரி, வடமுனை, வெலியாகந்தை குளங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக உன்னிச்சை குளத்தின் 3 வான்கதவுகளும், நவகிரிகுளம், றூகம்குளம், வடமுனைகுளங்களின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.

அதேவேளை அம்பாறை ரம்புக்கன் ஓயாவின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள மையால் மட்டக்களப்பு செங்கலடி, சித்தாண்டி பகுதியில் வெள்ளம் ஏற்படும் நிலைமை காணப்படுகின்றதுடன் மட்டு நவகிரிகுளம் வான்கதவு திற்கப்பட்டுள்ளாதால் வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மக்களும் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் அறிவித்துள்ளது.

இதேவேளை கனமழையால் பல பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால் அப்பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதோடு, வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் 56 குடும்பங்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...