நியமனம் முதல் ஒரே செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள்

Date:

யாழ். மாவட்ட பிரதேச செயலகங்களில் பணியாற்றும் அலுவலக உதவியாளர்கள் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் பணியாற்றுவதா   தெரிவிக்கின்றனர்.

யாழ்.மாவட்ட பிரதேச செயலகங்களில் 20 வருடங்களைத் தாண்டிய 6 அலுவலக உதவியாளர்கள் (பியோன்) பணிபுரிவதாக  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் 3 பேர் 21 வருடங்களும்,  ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் ஒருவர் 27 வருடங்கள், சங்கானை, சாவகச்சேரி  பிரதேச செயலகங்களில் தலா  ஒருவர் 22 வருடங்கள்,  பணியாற்றுகின்றார்கள்.

5 வருடங்களைத் தாண்டி 20 பேர் பிரதேச செயலகங்களில் பணியாற்றுகிறார்கள். கோப்பாய் பிரதேச செயலகத்தில் 5 பேர்,  நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் ஒருவர், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் 4 பேர், தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் 4 பேர்,  ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் 2 பேர், சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் 2 பேர், சங்கானை பிரதேச செயலகத்தில் ஒருவர், உடுவில் பிரதேச செயலகத்தில் ஒருவர் பணியாற்றுகின்றார்கள்.

இடமாற்றமின்றி பணியாற்றுவதால் அந்த அலுவலகங்களை தமது உரிமை இடமாக எடுத்துக் கொள்வதாக தேவை கருதி பிரதேச செயலகங்கள் செல்லும் மக்கள் சுட்டிக்காட்டி நிற்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...