நியமனம் முதல் ஒரே செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள்

Date:

யாழ். மாவட்ட பிரதேச செயலகங்களில் பணியாற்றும் அலுவலக உதவியாளர்கள் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் பணியாற்றுவதா   தெரிவிக்கின்றனர்.

யாழ்.மாவட்ட பிரதேச செயலகங்களில் 20 வருடங்களைத் தாண்டிய 6 அலுவலக உதவியாளர்கள் (பியோன்) பணிபுரிவதாக  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் 3 பேர் 21 வருடங்களும்,  ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் ஒருவர் 27 வருடங்கள், சங்கானை, சாவகச்சேரி  பிரதேச செயலகங்களில் தலா  ஒருவர் 22 வருடங்கள்,  பணியாற்றுகின்றார்கள்.

5 வருடங்களைத் தாண்டி 20 பேர் பிரதேச செயலகங்களில் பணியாற்றுகிறார்கள். கோப்பாய் பிரதேச செயலகத்தில் 5 பேர்,  நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் ஒருவர், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் 4 பேர், தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் 4 பேர்,  ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் 2 பேர், சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் 2 பேர், சங்கானை பிரதேச செயலகத்தில் ஒருவர், உடுவில் பிரதேச செயலகத்தில் ஒருவர் பணியாற்றுகின்றார்கள்.

இடமாற்றமின்றி பணியாற்றுவதால் அந்த அலுவலகங்களை தமது உரிமை இடமாக எடுத்துக் கொள்வதாக தேவை கருதி பிரதேச செயலகங்கள் செல்லும் மக்கள் சுட்டிக்காட்டி நிற்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஊர்காவற்றுறை பிரதேச சபை வரவு செலவு திட்டம் தோல்வி

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகையில் உள்ள ஊர்காவற்றுறை பிரதேச சபை...

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...