இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு: திருமலையில் நடத்தினார் செந்தில் தொண்டமான்

Date:

தமிழ் மக்களின் பாரம்பரியத்தையும் வீரத்தையும் பறைசாற்றும் ஜல்லிக்கட்டை இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஆரம்பித்துவைத்தார்.

இன்று 6ஆம் திகதி மற்றும் 7,8ஆம் திகதிகளில் திருகோணமலையில் நடைபெறும் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடைபெறுகின்றன.

உலக நாடுகளில் தமிழ்நாட்டை தாண்டி வேறு ஒரு நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மலேசியா பாராளுமன்ற உறுப்பினர் டட்டுக் ஶ்ரீ முருகன் , சிறப்பு விருந்தினர்களாக ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்க தலைவர் ஒண்டிராஜ், செயலாளர் ராஜா ஆகியோர் கலந்துகொண்டதுடன், இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த விசேட அழைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்துடன் இணைந்து ஜல்லிக்கட்டு ஏற்பாடு செய்யப்பட்டது. திருகோணமலையில் உள்ள போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...