பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்பட்ட காணி தொடர்பில் விசேட விசாரணை

Date:

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்பட்ட காணி தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

விசாரணையின் பின்னர் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் கைத்தொழில் மற்றும் விவசாயத்திற்காக காணி விடுவிக்கப்பட்ட போதிலும் கடந்த காலங்களில் பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் பாரிய பிரச்சினை எழுந்துள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

“அமைச்சரவை ஒரு முடிவை எடுத்தது, 2015 முதல் நில சீர்திருத்த ஆணையத்தால் யாருக்கு நிலம் வழங்கப்பட்டது? என்ன திட்டங்களுக்கு? எந்த அடிப்படையில்? விசாரணை முடியும் வரை LRC மூலம் நிலம் ஒதுக்கீடு செய்வதை நிறுத்தப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த விசாரணையை நடத்தி இந்த காணிகள் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது, இதில் ஊழல் நடந்துள்ளதா என்பதை கண்டறிய நடவடிக்கை எடுப்போம் என நம்புகிறோம்” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுரேஷ் சாலேவுக்கு திடீர் மாரடைப்பு

முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சாலே திடீர் மாரடைப்பு...

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையில் 20 கிலோ அரிசி!!

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையின் கீழ் 20 கிலோ அரிசி...

ஜனாதிபதி செயலக சிரேஷ்ட உதவிச் செயலாளர் கைது…!

-போலி கடவுச்சீட்டு தயாரித்த குற்றச்சாட்டு: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் தொடர்புடைய நபர் ஒருவர்...

சரித் அபேசிங்க மீது SJB எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய...