Friday, May 10, 2024

Latest Posts

இன்றும் அடிக்கடி மின்தடை

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இன்றைய தினமும் (07) இடைக்கிடையில் மின்தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தில் உள்ள ஜெனரேட்டர் ஒன்று பழுதடைந்துள்ளதாலும் மற்றும் அதிக மின்சார தேவையினாலும் இவ்வாறு மின்தடை ஏற்படக்கூடும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நேற்றிரவு கொழும்பு உட்பட பல பகுதிகளில் மின்சார விநியோகம் பல தடவைகள் தடைப்பட்டது.

இரவு 9.30 மணியளவில் மின்சாரம் வழமைக்குத் திரும்பியதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் அமைப்பு செயற்பாடுகளை தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.