கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

Date:

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கொஸ்கொட ஹதரமன்ஹந்திய பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் இது முன்னெடுக்கப்படுவதாக பொலீசார் கூறுகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி பலபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த நபர் கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது நிலைமை மோசமாக இல்லை என்றும், துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க இராணுவமும் காவல்துறையும் இணைந்து அந்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...