SJB எம்பிக்கு கொலை மிரட்டல்

0
176

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டாரா, தனக்கு உயிர் அச்சுறுத்தல் மிரட்டல்கள் வந்துள்ளதாக தெரிவித்து, தனது பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் இன்று கோரிக்கை விடுத்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) மேற்கொண்ட விசாரணையில், தனது உயிருக்கு ஆபத்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சபையில் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, இந்த விடயம் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளப் போவதாக உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here