ஹோமாகமவை சுற்றியுள்ள மக்களுக்கான விசேட அறிவிப்பு

Date:

ஹோமாகம கட்டுவான பிரதேசத்தின் கைத்தொழில் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் இருந்து புகை எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது நிலவும் பனிமூட்டம் காரணமாக குறித்த புகையில் குளோரின் கலந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலை ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அனைவரும் முகக்கவசம் அணிந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சூரிய ஒளி சரியாக இருந்தால் இந்நிலை தவிர்க்கப்படும் எனவும், அதுவரை புகை மூட்டமாக காணப்படுவதால் முகமூடிகளை முறையாக அணிந்து செயற்படுமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு பொலிசார் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த இரசாயன தொழிற்சாலையில் ஆகஸ்ட் 17ம் திகதி இரவு தீ விபத்து ஒன்று ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரான் தலைமையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாகம்

இலங்கை கிரிக்கெட்டில் பரவலான மாற்றங்களை கொண்டு வருவதற்காக விளையாட்டு துறை அமைச்சரினால்...

அர்ச்சுனா எம்பி பிணையில் விடுவிப்பு

யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற காணித் தகராறின் போது, பெண் ஒருவரைத்...

600,000 அமெரிக்க டொலர் மாயம்! விசாரணை தீவிரம்!!

இலங்கைத் அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்கத்அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில் மேலும் 600,000...

மீண்டும் மின்சார கட்டண உயர்வு

இலங்கையில் மீண்டும் மின்சார கட்டண உயர்வு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று...