வவுனியாவில் அதிகரித்து வரும் போதை ஆசாமிகளின் அட்டகாசம்

Date:

வவுனியா நகரப்பகுதியில் மது போதையில் இளைஞர் குழு ஒன்று தனியார் நிறுவன ஊழியரை தாக்கியதில் குறித்த ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று பகல் (08.01) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில்,

வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருப் பகுதியில் மது அருந்திவிட்டு வந்த இளைஞர் குழு ஒன்று பணம் தருமாறு கேட்டு வீதியில் நடந்து சென்ற முதலாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் நிறுவன ஊழியரை மிரட்டியதுடன் பணம் கொடுக்க மறுத்ததால் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.

குறித்த குழுவினர் இரண்டுக்கு மேற்பட்ட தடவை தாக்குதலை நடத்திய பின்னர் முற்சக்கர வண்டியில் தப்பிச் சென்றனர்.

இது தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் வாகன இலக்கத்துடன் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா நகரப்பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இவ்வாறான போதை ஆசாமிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றது.

வியாபார நிலையங்கள் அதிகமுள்ள மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் அதுவும் பகல் வேளைகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது பொதுமக்களுக்கு பாரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது.  

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...