நாடு வங்குரோத்து நிலையில் இருப்பதாக கூறப்படுவது குறித்து மத்திய வங்கி ஆளுநர் பதில்

Date:

நாடு வங்குரோத்து நிலையில் இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவ்வாறான ஆபத்து எதுவும் இல்லை என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டிலும் இவ்வாறான அபாயம் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரையில் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படவில்லை எனவும் கப்ரால் தெரிவித்தார்.

வரலாறு நெடுகிலும் நாடு அவ்வப்போது வங்குரோத்து நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டாலும் எந்தக் காலத்திலும் நாடு வங்குரோத்து நிலைக்குச் செல்லவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ‘2022 இலங்கைப் பொருளாதாரம்: சவால்களும் தீர்வுகளும்’ தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதும் நிலையாகிவிட்டதாகவும், கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமம் இல்லை என்றும் கப்ரால் கூறியுள்ளார்.

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எங்களிடம் கையிருப்பில் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே இருந்தன, ஆனால் ஆண்டின் இறுதியில் 06 பில்லியன் கடன் தவணைகளில் திருப்பிச் செலுத்த முடிந்தது, என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்...

அழுத்தம் கொடுத்து வலுக்கட்டாய வாக்குமூலம்

விசாரணை நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அழுத்தம்...

மின் கட்டண உயர்வு இன்று தொடக்கம் அமுலில்

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத்...