ஆதர்ஷா கரதனவுக்கு பிணை!

Date:

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்ட ஆதர்ஷா கரதன, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸின் உத்தரவின் பேரில் தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் கரதன விடுவிக்கப்பட்டார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹாஸும் மாரசிங்க தனது செல்ல நாயை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யும் காணொளி தொடர்பில்செய்த முறைப்பாட்டின் பேரில் கரதன குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் கணினி குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

டிசம்பர் 24 அன்று, ஹாஸும் மாரசிங்க, கரதனவுக்கு எதிராக CID யில் முறைப்பாடு செய்திருந்தார். சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்ட கேள்விக்குரிய வீடியோ மூலம் தன்னைக் களங்கப்படுத்த முயன்றதாகக் குற்றம் சாட்டினார்.

ஜனவரி 10 ஆம் திகதி, கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம், ஜனவரி 03 ஆம் திகதி கரதானவால் பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்தது.

இவ்வாறான ஒரு மனுவைத் தொடர அனுமதிப்பது மாரசிங்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணைகளுக்கு இடையூறாக அமையும் என்ற அடிப்படையில் மனு நிராகரிக்கப்பட்டது.

டிசம்பர் 23 அன்று ஹிருணிகா பிரேமச்சந்திரவுடன் ஊடகவியலாளர் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்த கரதன, ஹாஸும் மாரசிங்க தனது செல்ல நாயை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் காணொளியை வெளியிட்டார்.

ஹாஸும் மாரசிங்க தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்தார். அவதூறுக்காக பேசிய ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் கரதன இருவரிடமிருந்தும் ரூ.1 பில்லியன் நட்டஈட்டை கோரி வழக்கு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...