ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு வாக்களிப்பதை தவிர மாற்று வழியில்லை

Date:

தேசியத் தலைவர் என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதால் அவரை வெற்றிபெறச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என ஜனாதிபதியின் தொழிற் சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு கூடி ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவே போட்டியிடுவார் என இறுதித் தீர்மானம் எடுத்திருப்பதால், அது தொடர்பான பிரசாரங்கள் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்படும் என ரத்னப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி எதிர்வரும் 13ஆம் திகதி காலியில் முதலாவது வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

காலி, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டக் கூட்டங்கள் நடாத்தப்பட்டு நாடு பூராகவும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என ரத்னப்பிரிய குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணிலுகுக்கு எதிரான வழக்கு – விசாரணை புதன்கிழமை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு அடுத்ததாக...

2 மணிக்குப் பின்னர் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...

போதை பொருள் கடத்திய 22 தேரர்கள் கைது! 110 கோடி பெறுமதி “குஷ்” “ஹேஷ்” மீட்பு!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ்"...

வெசாக் விடுமுறை, விசேட வர்த்தமானி

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...