Friday, October 18, 2024

Latest Posts

முக்கிய செய்திகளின் சுருக்கம் 12.01.2024

1. வடக்கில் வசிக்கும் அனைத்து மக்களின் காணி உரிமை தொடர்பான பிரச்சினைகளை அடுத்த 2 மாதங்களுக்குள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

2. நாட்டில் அத்தியாவசிய சுகாதார சேவைகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, சுகாதாரத் துறையில் உள்ள சிறு ஊழியர்களின் தொழிற்சங்கங்களின் நாடளாவிய வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட அரச மருத்துவமனைகளில் ராணுவம் படைகளை நிறுத்துகிறது.

3. நாடு திவாலாகிவிட்டதாக 12 ஏப்ரல்’2022 அன்று அறிவித்த மத்திய வங்கி ஆளுநர் டொக்டர் நந்தலால் வீரசிங்கவுடன் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளனர். ஆளுனர் நிதி தொடர்பில் திடுக்கிடும் கருத்தை தெரிவித்ததாக அமைச்சர் ஒருவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதேவேளையில் ஒரு முக்கிய எதிர்க்கட்சி எம்பி ஒருவர் வீரசிங்கவை நம்பவில்லை என அறிவித்தார்.

4. ஜப்பான் நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.

5. தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகளையும் ஜனாதிபதியையும் சந்திப்பார்கள் என இராஜாங்க நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

6. அனைத்து இலங்கை பொது துறைமுக ஊழியர் சங்கத்தின் பிரதம செயலாளர் நிரோஷன் கோரகனகே கூறுகையில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான “மகிழ்ச்சி விருந்துக்கு” வழங்கப்பட்ட துறைமுக அதிகாரசபையின் 2 கப்பல்களின் செலவு கிட்டத்தட்ட ரூ. 5 மில்லியன் என்கிறார். எனினும் 2 கப்பல்களுக்கான எரிபொருளுக்கான மொத்த செலவு சுமார் ரூ. 300,000 மட்டுமே என அரசாங்க தரப்பு கூறுகிறது.

7. இங்கிலாந்தின் புத்தாண்டு கௌரவப் பட்டியல் 2024இல், நியூசிலாந்தில் வசிக்கும் 3 இலங்கையர்களை அவர்களின் பங்களிப்புகளுக்காக அங்கீகரித்துள்ளது. உணவு அறிவியல், ஊட்டச்சத்து மற்றும் சமூகத்திற்கான சேவைகளுக்காக டொக்டர் ஆன் டோலோரஸ் பெரேரா, அதுல குடா பண்டார வனசிங்க இலங்கை சமூகம் மற்றும் கிரிக்கெட்டுக்கான பங்களிப்புகளுக்காகவும் 2 தசாப்தங்களுக்கும் மேலாக புலம்பெயர்ந்த சமூகத்தை வடிவமைத்ததற்காக சதுன் கித்துலகொட ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

8. 2024/25க்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்யா நவரத்ன மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். செயலாளராக சத்துர கல்ஹேன தெரிவு செய்யப்பட்டார்.

9. டக்வத் லூயிஸ் அடிப்படையில் 3வது கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் சிம்பாப்வேயை 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை தோற்கடித்தது. சிம்பாப்வே – 22.5 ஓவரில் 96 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. வனிந்து ஹசரங்க 19/7. இலங்கை – 16.4 ஓவர்களில் 97/2 ஓட்டங்கள் எடுத்து வென்றது. குசல் மெண்டிஸ் 66*. தொடரை 2-0 என இலங்கை கைப்பற்றியது.

10. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஆலோசகர் பயிற்றுவிப்பாளராக மஹேல ஜெயவர்தனவின் பங்கு குறித்து முன்னாள் கிரிக்கெட் தலைவர் அர்ஜுன ரணதுங்க கேள்வி எழுப்பினார். 2023 உலகக் கோப்பையில் அணியின் தோல்விக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும், இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அல்லது எந்த பயிற்சி ஊழியர்களையும் நீக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.