படல்கும்புர பகுதியில் மண்சரிவு: 21 குடும்பங்களை சேர்ந்த 64 பேர் வெளியேற்றம்

Date:

படல்கும்புர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வரதொல வத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் 21 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேர் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மொனறாகலை மாவட்டத்துக்கான பிரதி பணிப்பாளர் நாயகம் ஏ.எச். ரவீந்திர குமார தெரிவித்தார்.

குறித்த பகுதியில் நேற்று 12 ஆம் திகதி முதல் சிறு அளவில் மண்சரிவுநிலை காணப்பட்டதாகவும், இன்று (13) பாரியளவு மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இப்பகுதியில் இருந்த 5 வீடுகளைக்கொண்ட லயன் குடியிருப்பொன்று முழுமையாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளது. 16 வீடுகள் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.

வெளியேற்றப்பட்ட மக்கள் தற்போது உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக வரதொல சிங்கள பாடசாலையில் பாதுகாப்பு மத்திய நிலையமொன்று அமைக்கப்படவுள்ளது.

இக்குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் பிரதி பணிப்பாளர் நாயகம் மேலும் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...