இனவாதிகளுக்கு பயமில்லை மலையக மக்களுக்கு விசேட அறிவிப்பு விடுத்தார் சஜித்!

Date:

இனவாதிகளுக்கு பயமில்லை என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாட்டில் இனவாதத்தை மதவாதத்தை அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் தைப்பொங்கல் வி​ழாவில் உரையாற்றிய சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

தனது தந்தை ரணசிங்க பிரேமதாஸ மலையக மக்களுக்கு செய்த சேவைகளை விட அதிகம் தன்னால் செய்ய முடியும் என அவர் கூறினார்.

மலையக மக்களின் கல்வி, சுகாதார முன்னேற்றத்திற்கு எதிர்கட்சியில் இருந்து கொண்டு சேவையாற்றுவதை போல ஜனாதிபதியானதும் மலையக மக்களுக்கான விஞ்ஞாபனம் தயாரித்து மலையக அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணியை உருவாக்க உள்ளதாக சஜித் பிரேமதாஸ கூறினார்.

இலங்கை நாட்டுக்கு இந்தியா வழங்கி வரும் நன்கொடை உதவிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை நிலக்கரி நிறுவன அலுவலகத்திற்கு பூட்டு

2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து ஜனாதிபதி...

அதிகார மோகத்தில் NPP தரப்பு கலவரம்!

மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரத்தை முறையான தேர்தல் இன்றி கைப்பற்ற...

BYD ATTO 1 தொடர்பிலும் சிக்கல்

ஜான் கீல்ஸ் CG ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் BYD ATTO...

மஹிந்தவின் சொத்து விபரம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமது சொத்துகள் மற்றும் கடன்கள் தொடர்பான...