கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா : முன்னாயத்தப் பணி ஆய்வுக்காக அதிகாரிகள் விஜயம்

Date:

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான முன்னாயத்த பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்கான கச்சதீவு நோக்கிய விஜயமொன்று நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (16) முன்னெடுக்கப்பட்டது.

இப்பயணத்தில் நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி பத்திநாதன் அடிகளார், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), நெடுந்தீவு பிரதேச செயலர் எப்.சி. சத்தியசோதி, யாழ்ப்பாண மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மற்றும் கடற்படை உயரதிகாரிகள் இணைந்திருந்தனர்.

குறிகாட்டுவான் துறைமுகத்தில் இருந்து கடற்படை படகு மூலம் கச்சதீவு சென்ற இக்குழுவினர், அங்கு திருவிழாவுக்கு வரும் பக்தர்களது தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மேற்கொள்ளவுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சேவை முடக்கம்

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS) ஏற்பட்டுள்ள அவசர...