கோட்டா வசித்த மாளிகையில் பிடிபட்ட கோடிக்கணக்கான பணத்திற்கு நடக்கப் போவது என்ன

0
40

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் காலத்தில் ஜனாதிபதி மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட பணம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுப்பதில்லை என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் அறிவித்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் ஆணைக்குழு கோட்டை நீதவான் திலின கமகேவிடம் தெரிவித்துள்ளது.

ஜூலை 9, 2022 அன்று, செயற்பாட்டாளர்கள் கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்தபோது, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அலுவலகத்தில் ஒரு கோடியே எழுபத்து எண்ணுயிரத்து ஐம்பதாயிரம் ரூபாவைக் கண்டெடுத்தனர்.

இது தொடர்பான அறிக்கையை முன்வைத்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, முறைப்பாட்டில் விசாரணைக்கு தேவையான கூறுகள் இல்லை என நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

மேலும், புகார் தொடர்பான சொத்துக்களை விசாரிக்க போதிய ஆதாரம் இல்லை என்றும் ஆணையம் கூறியுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோன் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை அச்சுறுத்திய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய தென்னகோன் அவ்வாறான அச்சுறுத்தலை விடுக்கவில்லை எனத் தெரியவந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாக்கும் அதிகாரசபை நீதிமன்றில் அறிவித்துள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் பேரவையின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜராகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணைகளின் மேலதிக அறிக்கைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here