உக்ரைன் தலைநகர் கீவ்-ல், ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் உயிரிழந்துள்ளார்.
ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்த விபத்தில், 2 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலையொன்றுக்கு அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய நிலையில், பாடசாலையில் இருந்த மாணவர்களும் தீ விபத்தில் சிக்கியிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர், ஆபத்துகால உதவிக்கான ஹெலிகாப்டர் என உக்ரைன் தகவல்கள் தெரிவிக்கின்றன.