ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் மீண்டும் முடக்கம்

Date:

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்றும் (27) பெருமளவிலான மக்கள் அங்கு பிரவேசித்துள்ளனர்.

கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, மறு அறிவித்தல் வரை அனைத்து பொதுச் சேவைகளும் இன்று (27) முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் நேற்று (26) அறிவித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், இன்று காலை முதலே ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வருகை தந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவர்களில் சிலர் கடந்த செவ்வாய்க்கிழமை வருகை தந்து தமது பணிகளை முடிக்க முடியாமல் போனவர்களாவர் என குறிப்பிடப்படுகிறது.

அதேபோல், வெள்ளத்தினால் அடையாள அட்டைகளை இழந்த பாடசாலை மாணவர்களும் வந்திருந்தனர்.

எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வதற்கு அவர்களுக்கு அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...