வாழைச்சேனையில் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் விநியோகம்

Date:

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளரின் பணிப்பின் பேரில் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் (17) இடம்பெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மிலின் ஆலோசனைக்கு அமைய சமூக பராமரிப்பு நிலைய உத்தியோகத்தர்களின் முயற்சியின் பயனாக எம். ஜே.எப் சரிடேபிள் அமைப்பினால் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினரும் வாழைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினரும் செய்யத் அலிசாஹிர் மௌலானா, உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஸா. பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம். றுவைத் சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ.நஜீம் என பலரும் கலந்து கொண்டு இவ்வுபகரணங்களை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...