வாழைச்சேனையில் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் விநியோகம்

Date:

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளரின் பணிப்பின் பேரில் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் (17) இடம்பெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மிலின் ஆலோசனைக்கு அமைய சமூக பராமரிப்பு நிலைய உத்தியோகத்தர்களின் முயற்சியின் பயனாக எம். ஜே.எப் சரிடேபிள் அமைப்பினால் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினரும் வாழைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினரும் செய்யத் அலிசாஹிர் மௌலானா, உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஸா. பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம். றுவைத் சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ.நஜீம் என பலரும் கலந்து கொண்டு இவ்வுபகரணங்களை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து மூவர் பலி

நாவலப்பிட்டி, மாப்பாகந்தை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி...

முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 11 சடலங்கள் மீட்பு

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 11 பேரின் உடல்கள்...

அரச வங்கியில் மூன்றரை கோடி திருட்டு

களுத்துறை - ஹொரணை நகரில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய்...

ஹொரணை முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 9 பேர் பலி

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 9 பேரின் உடல்கள்...