பாதாள உலகக் குழு தலைவர் வீட்டு பங்கருக்குள் லட்ச லட்சமாக பணம்

Date:

நீதிமன்ற உத்தரவின் பேரில் வீரகுள பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கணேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய சீடரான பட்டா மஞ்சுவின் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் குழு சோதனை நடத்தியது.

தற்போது வெளிநாடுகளில் இருந்து இந்த நாட்டில் போதைப்பொருள் வர்த்தகம் நடத்தப்பட்டு வருகின்றது.

குறித்த வீட்டில் பங்கருக்குள் மறைத்து வைத்திருந்த 22 இலட்சத்திற்கும் அதிகமான பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் ஒரு பெண்ணும், ஆண் ஒருவரும் இருந்துள்ளனர். வீட்டில் இருந்த பெண்ணின் கையடக்கத் தொலைபேசி சோதனையிட்டபோது, போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் அவர்கள் மூலம் புழக்கத்தில் இருப்பது தெரியவந்ததையடுத்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் வீட்டை மேலும் சோதனையிட்டனர்.

கைது செய்யப்பட்ட பெண் 29 வயதுடைய கெஹெல்பெத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

சந்தேகநபரான பெண் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் வலையமைப்பைக் கண்டறிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வயிற்றுக்குள் 1 கோடி ரூபாய் கொக்கெய்ன்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுமார் 1 கோடி ரூபாய் பெறுமதியான...

மசகு எண்ணெயின் விலை மீண்டும் உயர்வு

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை மீண்டும் 100...

இலங்கை நிலக்கரி நிறுவன அலுவலகத்திற்கு பூட்டு

2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து ஜனாதிபதி...

அதிகார மோகத்தில் NPP தரப்பு கலவரம்!

மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரத்தை முறையான தேர்தல் இன்றி கைப்பற்ற...