பாதாள உலகக் குழு தலைவர் வீட்டு பங்கருக்குள் லட்ச லட்சமாக பணம்

Date:

நீதிமன்ற உத்தரவின் பேரில் வீரகுள பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கணேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய சீடரான பட்டா மஞ்சுவின் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் குழு சோதனை நடத்தியது.

தற்போது வெளிநாடுகளில் இருந்து இந்த நாட்டில் போதைப்பொருள் வர்த்தகம் நடத்தப்பட்டு வருகின்றது.

குறித்த வீட்டில் பங்கருக்குள் மறைத்து வைத்திருந்த 22 இலட்சத்திற்கும் அதிகமான பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் ஒரு பெண்ணும், ஆண் ஒருவரும் இருந்துள்ளனர். வீட்டில் இருந்த பெண்ணின் கையடக்கத் தொலைபேசி சோதனையிட்டபோது, போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் அவர்கள் மூலம் புழக்கத்தில் இருப்பது தெரியவந்ததையடுத்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் வீட்டை மேலும் சோதனையிட்டனர்.

கைது செய்யப்பட்ட பெண் 29 வயதுடைய கெஹெல்பெத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

சந்தேகநபரான பெண் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் வலையமைப்பைக் கண்டறிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரச வங்கியில் மூன்றரை கோடி திருட்டு

களுத்துறை - ஹொரணை நகரில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய்...

ஹொரணை முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 9 பேர் பலி

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 9 பேரின் உடல்கள்...

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தடை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி...

ஹர்ஷவை ஏமாற்ற நினைத்த அரசாங்கம்!

நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி...