இதுவரை 66 ஊழியர்கள் பணிநீக்கம்

Date:

பணி இடைநிறுத்தப்பட்ட இலங்கை மின்சார சபை ஊழியர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்சார ஊழியர்கள் குழுவின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது வாடிக்கையாளர்களுக்கு மின் கட்டணத்தை செலுத்துவதற்கு இடையூறு விளைவித்த மற்றும் கட்டண வாயில்களை அடைத்தமைக்காக 15 ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக மின்சார சபை நேற்று (19) தெரிவித்துள்ளது.

மின்சார சபையை தனியார் மயமாக்கப் போவதாக அதன் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு இயக்கத்தை அண்மையில் ஆரம்பித்திருந்தன.

இதன்படி, மின்சார துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இலங்கை மின்சார சபையின் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை மீறிச் செயற்படும் ஊழியர்களை பணி இடைநிறுத்தம் செய்யுமாறும், உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறும் இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பள உயர்வு என்ற போர்வையில் தொழிலார்களுக்கு கெடுபிடி வேண்டாம் – செந்தில் தொண்டமான்

தொழிற்சங்கங்களுக்கும் தொழில் அமைச்சின் செயலாளருக்கும், இடையில் இன்று தொழில் அமைச்சில் கலந்துரையாடல்...

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் விலை உயரும்

அடுத்த போகத்தில் இருந்து விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கை 220...

கந்தகெட்டிய பிரதேச சபை வரவு செலவு திட்டம் தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026...

சஜித்தின் இந்திய பயணம் குறித்து கட்சிக்கே தெரியாது!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இந்திய பயணம் குறித்து தானோ அல்லது...