இதுவரை 66 ஊழியர்கள் பணிநீக்கம்

Date:

பணி இடைநிறுத்தப்பட்ட இலங்கை மின்சார சபை ஊழியர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்சார ஊழியர்கள் குழுவின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது வாடிக்கையாளர்களுக்கு மின் கட்டணத்தை செலுத்துவதற்கு இடையூறு விளைவித்த மற்றும் கட்டண வாயில்களை அடைத்தமைக்காக 15 ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக மின்சார சபை நேற்று (19) தெரிவித்துள்ளது.

மின்சார சபையை தனியார் மயமாக்கப் போவதாக அதன் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு இயக்கத்தை அண்மையில் ஆரம்பித்திருந்தன.

இதன்படி, மின்சார துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இலங்கை மின்சார சபையின் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை மீறிச் செயற்படும் ஊழியர்களை பணி இடைநிறுத்தம் செய்யுமாறும், உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறும் இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...