நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் ஒருவருக்கு நிபந்தனையின்றி ஆதரவளிக்கத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினால் நாடு அழிந்ததாக சேனாரத்ன குறிப்பிடுகின்றார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க கூறினால் இரு கைகளை உயர்த்தி ஆதரவளிப்பேன் என அவர் வலியுறுத்துகின்றார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மாற்றப்பட்டு இன்னும் ஓரிரு வருடங்கள் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்தாலும் பிரச்சினையில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவிக்கின்றார்.