எரிபொருள் இல்லை, மீண்டும் சப்புகஸ்கந்த முடங்கியது!

Date:

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சப்புகஸ்கந்தவிலுள்ள இரண்டு மின் உற்பத்தி நிலையங்களிலும் நேற்று இரவு மீண்டும் மின் உற்பத்தி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் எண்ணெய்க் கையிருப்பு நேற்றிரவு 8 மணி வரை மட்டுமே இருந்ததாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டு மின் உற்பத்தி நிலையங்களும் நிறுத்தப்பட்டதால் தேசிய மின் வாரியமானது 100 மெகாவோட் திறனை இழந்துள்ளது.
இதேவேளை, டீசல் தட்டுப்பாடு காரணமாக செயலிழந்த களனி திஸ்ஸ அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான டீசல் கையிருப்பு நேற்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில்...