தமிழ் அரசியல் கைதி மீது சிறைச்சாலையில் தாக்குதல்

Date:

இலங்கை மத்திய வங்கி குண்டு தாக்குதலோடு சம்பந்தப்பட்டவர் என்ற குற்றச்சாட்டில் கைதான மொரிஸ் என்பவர் மீது மகசீன்

சிறைச்சாலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தாக்குதலுக்கு உள்ளானவரை நேரில் சென்று பார்வையிடவுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை அரசியல் கைதிகளாக அரசாங்கம் உள்வாங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் நடவடிக்கை திருப்தியளிக்கவில்லை என கூறியுள்ள சாணக்கியன், இதில் சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பிக்களுக்கான மேலும் ஒரு சலுகை ரத்து

பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள...

அச்சத்தில் கோயில் கோயிலாக செல்லும் அரசியல்வாதிகள்!

தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கையின் போது...

31 கோடி பெறுமதி போதை பொருட்கள் மீட்பு

சீதுவ பகுதியில் உள்ள ஒரு தனியார் அஞ்சல் சேவை நிலையத்தில் சுங்க...

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...