ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம்!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (ஜன.26) சர்வகட்சி மாநாடு நடைபெறவுள்ளது.

பிற்பகல் 04.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த சர்வகட்சி கூட்டத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

நாடாளுமன்ற சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் ஒருமித்த கருத்தை எட்டுவது மற்றும் தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2022 டிசம்பர் 13 அன்று கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்று அழைக்கப்பட்டது. அதில் தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டது. இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், இந்த விவகாரங்கள் குறித்து மேலும் விவாதிக்கப்பட்டு அவர்களுக்குள் இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பணவீக்கம் 5.5% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம்...

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...

முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...

அன்று நடந்த சம்பவம் ஒன்று!

இது 2022 ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடந்த சம்பவம் என...