அதிகாலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் பனிமூட்டம் காணக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நாட்டில் பிரதானமாக மழையில்லாத காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையில் நாளை முதல் மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாகவும், மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலியிலும் சில இடங்களில் பனிமூட்டமான நிலை நிலவும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.