திருமலையில் சமத்துவப் பொங்கல், ஆளுநர் செந்திலுக்கு ‘கிழக்கின் நாயகன்’ விருது

0
31

நாட்டில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு ‘சமத்துவ பொங்கல்’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் இணைந்து இந்த சமத்துவ பொங்கல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்ததுடன் இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு “கிழக்கின் நாயகன்” Man of the east விருதும் வழங்கி வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தின் 14 சிவில் அமைப்புகளால் அனைத்து மதத்தினரும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து மக்களும் கலந்து கொண்டு சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது.

ஆளுநர் செயலகத்தில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு ஆற்றிய சேவைகளைப் பாராட்டி சிவில் சமூகங்களால் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு “கிழக்கின் நாயகன்” விருது வழங்கப்பட்டது.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அதுகோரலவும் கலந்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here