திருமலையில் சமத்துவப் பொங்கல், ஆளுநர் செந்திலுக்கு ‘கிழக்கின் நாயகன்’ விருது

Date:

நாட்டில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு ‘சமத்துவ பொங்கல்’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் இணைந்து இந்த சமத்துவ பொங்கல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்ததுடன் இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு “கிழக்கின் நாயகன்” Man of the east விருதும் வழங்கி வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தின் 14 சிவில் அமைப்புகளால் அனைத்து மதத்தினரும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து மக்களும் கலந்து கொண்டு சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது.

ஆளுநர் செயலகத்தில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு ஆற்றிய சேவைகளைப் பாராட்டி சிவில் சமூகங்களால் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு “கிழக்கின் நாயகன்” விருது வழங்கப்பட்டது.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அதுகோரலவும் கலந்து கொண்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...