கட்டுநாயக்க அதிவேக வீதியின் அதிவேக மின் கம்பிகளை திருடர்கள் அறுத்து அகற்றியதால் மின்விளக்குகளை ஒளிரச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஜப்பானின் கடனுதவியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய “கல்யாணி” பாலத்தின் கொங்கிறீட் மூடிகளில் இருந்து செப்பு கம்பிகள் அகற்றப்பட்டும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் கேபிள்கள் அகற்றப்பட்டதிலும் 286 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஊடாக தெரியவந்துள்ளது.