அதிவேக வீதியில் மற்றும் ஒரு பயங்கர விபத்து, வெளிநாட்டவர் பலி

Date:

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் கடவத்தைக்கும் கெரவலபிட்டியவிற்கும் இடையில் 27வது கிலோ மீற்றர் பகுதியில் ஆஸ்திரிய குடும்பம் சென்ற சொகுசு வான் ஒன்று லொறியுடன் மோதியதில் 37 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர் schusccr woifgamg ஆவார். அவரது தாயார் படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹிக்கடுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் நோக்கி பயணித்த போது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அதுருகிரிய அதிவேக நெடுஞ்சாலை கட்டுப்பாட்டு நிலையம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள்...

தன் மீதான தாக்குதல் செய்தி குறித்து டில்வின் சில்வா!

JVP தலைமையகமான பெலவத்தையில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினரும்...

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து!

​யாழ். மண்ணின் உயிர்நாடியாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை...

கப்பில சந்திரசேன தற்கொல?

கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள்...