அதிவேக வீதியில் மற்றும் ஒரு பயங்கர விபத்து, வெளிநாட்டவர் பலி

Date:

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் கடவத்தைக்கும் கெரவலபிட்டியவிற்கும் இடையில் 27வது கிலோ மீற்றர் பகுதியில் ஆஸ்திரிய குடும்பம் சென்ற சொகுசு வான் ஒன்று லொறியுடன் மோதியதில் 37 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர் schusccr woifgamg ஆவார். அவரது தாயார் படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹிக்கடுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் நோக்கி பயணித்த போது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அதுருகிரிய அதிவேக நெடுஞ்சாலை கட்டுப்பாட்டு நிலையம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றும் மழை நீடிக்கும்

இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

IMF கடன் கிடைத்த கையோடு விலை கிடுகிடுவென உயரும்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்திலிருந்து (IMF) கடன் தவணைகளான இரண்டையும்...

SJBயிடம் தோல்வியுற்ற NPP

ஹிரியால பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர் சபையைத் தேர்ந்தெடுக்க இன்று...

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை

இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்...