அதிவேக வீதியில் மற்றும் ஒரு பயங்கர விபத்து, வெளிநாட்டவர் பலி

Date:

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் கடவத்தைக்கும் கெரவலபிட்டியவிற்கும் இடையில் 27வது கிலோ மீற்றர் பகுதியில் ஆஸ்திரிய குடும்பம் சென்ற சொகுசு வான் ஒன்று லொறியுடன் மோதியதில் 37 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர் schusccr woifgamg ஆவார். அவரது தாயார் படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹிக்கடுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் நோக்கி பயணித்த போது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அதுருகிரிய அதிவேக நெடுஞ்சாலை கட்டுப்பாட்டு நிலையம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...