பதவி சண்டை ; தமிழரசுக் கட்சியின் மாநாடு ஒத்திவைப்பு!

Date:

திருகோணமலையில் நாளை (28) நடைபெறவிருந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் சிரேஷ்ட தலைவரான மாவை சேனாதிராஜா இன்று அறிவித்தார்.

கட்சியின் மத்தியகுழு கூடி புதிய திகதியை தீர்மானிக்கும் எனவும் அவர் கூறினார்.
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் திருகோணமலையில் இன்று நடைபெற்றது.

இதன்போது செயலாளர் பதவி உட்பட கட்சியின் நிர்வாகப் பதவிகளுக்கு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவிருந்த நிலையில், பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பில் கடும் சர்ச்சை ஏற்பட்டது.

இதனையடுத்து பொதுச்செயலாளர் பதவி தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் குகதாசன் 112 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

அதன்பின்னர் பொதுச்சபை கூடியது. மத்திய குழு எடுத்த முடிவை அங்கீகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது. எனினும், குழப்பம் ஏற்பட்டதால், கூட்டம் நிறைவுபெற்றது.

தனது தெரிவு சட்டப்பூர்வமானது என புதிய பொதுச்செயலாளராக தெரிவுசெய்யப்பட்ட குகதாசன் தெரிவித்தார். மாநாடுதான் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அவர்கள் குறிப்பிட்டனர், மாறாக செயலாளர் பதவி பற்றி பேசவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...