மேலும் மூன்று வழக்குகளில் இருந்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முற்றாக விடுதலை

0
162

153 சதோச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று வழக்குகளில் இருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்குகள் இன்று (28) கொழும்பு பிரதான நீதவான் புத்திக சி.ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

2010 மற்றும் 2014 க்கு இடையில் 153 சதோச ஊழியர்கள் சட்டப்பூர்வ கடமைகளில் இருந்து நீக்கப்பட்டு அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படும் வகையில் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டதாக இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here