மேலும் மூன்று வழக்குகளில் இருந்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முற்றாக விடுதலை

Date:

153 சதோச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று வழக்குகளில் இருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்குகள் இன்று (28) கொழும்பு பிரதான நீதவான் புத்திக சி.ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

2010 மற்றும் 2014 க்கு இடையில் 153 சதோச ஊழியர்கள் சட்டப்பூர்வ கடமைகளில் இருந்து நீக்கப்பட்டு அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படும் வகையில் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டதாக இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேதினம் குறித்த இதொகாவின் அறிவிப்பு

தொழிலாளர்களின் உரிமைக்காக போராடி தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுத்த நாள் மேதினமாகும். இலங்கை தொழிலாளர்...

அர்ச்சுனா விளக்கமறியலில்

இலவாலை பொலிஸாரால் இன்று (27) காலை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

2.5 மில்லியன் டொலர் குறித்து விவாதிக்க அரச தரப்பு மறுப்பு

அமெரிக்க டாலர் 2.5 மில்லியன் அளவிலான வெளிநாட்டு கடன் தவணை தொகை...

கொழும்பு மகசின் சிறையில் கைதி அடித்துக் கொலை?

கொழும்பு மகசின் சிறையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒரு...